சென்னை: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 71,000 டன் நிலக்கரி மாயமானதாக பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமான நிலையில் தூத்துக்குடியில் மாயமானதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் புதிதாக வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.