×

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்: அடுத்த முறை தங்கம் வெல்வேன் என உறுதி

சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று தமிழகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலு நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு நேற்று சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மாரியப்பன் தங்கவேலு சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து மாரியப்பன் தங்கவேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல்வர் எனக்கு வாழ்த்து தெரிவித்து கண்டிப்பாக வேலை தருவதாக கூறியிருக்கிறார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வெள்ளி வென்றது மகிழ்ச்சியாக இருந்தாலும் அதிலும் சிறு வருத்தம் உள்ளது. நான் இங்கிருந்து செல்லும் போது தங்கம் வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் சென்றேன். ஆனால், மழை காரணமாக என்னால் தங்கம் வெல்ல முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த முறை தங்கம் வெல்வேன்.

பத்து நாட்கள் இடைவெளி விட்டு என்னுடைய பயிற்சியை மீண்டும் தொடங்க உள்ளேன். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே என்னுடைய குறிக்கோள். தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன். பிரதமர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகவும் இயல்பாக பேசி எனக்கு வாழ்த்து தெரிவித்தார். கண்டிப்பாக என்னை சந்திப்பதாக கூறியுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தில் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mariappan ,Paralympics , Paralympic silver medalist Mariappan meets first and congratulates: next time gold is guaranteed to win
× RELATED மூதாட்டி தீக்குளித்து தற்கொலை