திருமங்கலம் : கள்ளிக்குடியிலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.சென்னம்பட்டி அருகே கவுண்டமாநதியின் மேல் மேம்பாலம் அமைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. திருமங்கலம் மருதங்குடி, பெரியார் நிலையம் குராயூர், டி.கல்லுப்பட்டி காரியாபட்டி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு டவுன் பஸ்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நூற்றுக்கணக்கதில் இப்பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர்.
தற்போது பாலத்தின் நடுவே சிமெண்ட் கலவை பெயா்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலத்தினை வாகனங்கள் கடக்கும் போது பாலம் அதிர்வடைகிறது. இதனால் பாலத்தினை கடந்து செல்லும் வாகனோட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பதே 10க்கும் மேற்பட்ட கிராமமக்களின் கோரிக்கையாகும்.