×

போலீஸ் ஏட்டை தாக்கிய 2 வாலிபர்கள் சிக்கினர்

ஆவடி: பைக் மீது கார் உரசியதுபோல் சென்றதால் தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை தாக்கி ஹெல்மெட்டால் அடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருமுல்லைவாயல் சாந்திநகர் 2வது தெருவை சேர்ந்தவர் பரத்குமார்(52). இவர், சென்னையில் உள்ள நுண்ணறிவு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி உறவினரை பார்த்துவிட்டு திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். ஆவடி சி.டி.எச் சாலை தனியார் பள்ளி அருகே பைக்கில் வந்தார். அப்போது, பின்னால் வந்த கார் இவரது பைக்கை உரசுவது போல் சென்றது. இதனையடுத்து பரத்குமார், காரில் இருந்தவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது காரில் இருந்து குடிபோதையில் இறங்கி இருவர் பரத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் இருவரும் அவரை கைகளால் முகத்தில் சரமாரியாக தாக்கினர். மேலும், அவர்கள் பரத்குமார் ஹெல்மெட்டை பறித்து அவரை தலையில் அடித்தனர். இதில் படுகாயமடைந்த பரத்குமார் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடி  காமராஜர் நகரை சேர்ந்த பலராமன்(32), கவுரிபேட்டையை சேர்ந்த கார்த்திக்(34) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.



Tags : The police hit the card 2 teenagers were trapped
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...