×

கொரோனா விதிகளை மீறி ஆர்ப்பாட்டம்: அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கூட்டமாகவும், சமூக இடைவெளி இல்லாமலும் ஆர்ப்பாட்டம் செய்ததாக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்பட20 பெண்கள் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Corona rule, demonstration, AIADMK, prosecution
× RELATED திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல்