திருச்சி: திருச்சி உறையூர் லிங்கா நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு, மீன்வளத் துறை இயக்குனர் ஷர்மிளா, உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி ஆகியோர் தலைமையில் மொத்தம் 14 கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். இதில் மார்பின் தடவிய 350 கிலோ மீன்களும் கெட்டுப்போன 300 கிலோ மீன்களும் ஆகிய 650 கிலோ மீன்களை குப்பையில் கொட்டி மண்ணில் புதைத்து அளிக்கப்பட்டது.