மதுரை: ரேஷன் அரிசியை விற்பவர்களின் குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள் தருவது நிறுத்தப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் அரிசி பறிமுதல் தொடர்பாக குமார் என்பவர் முன்ஜாமீன் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.