×

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த பெண்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக  மிரட்டல் விடுத்த பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடந்த 2008- 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் தகுதி தேர்வில் கலந்து கொண்டு அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பென்னாகரம் அடுத்து பிக்கம்பட்டி கிராமத்து சேர்ந்த வேடியப்பன் என்பவருக்கு இதுவரை பணி வழங்காத காவல்துறையை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வேடியப்பன் என் மனைவி மோகனா என்பவரை காவல்துறையினர் பேச்சுவார்த்தை மூலம் பத்திரமாக மீட்டனர். இதனால் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dharamapuri , Dharmapuri, Collector, Building, Suicide, Threat, Woman
× RELATED தருமபுரி அதியமான்கோட்டை காவல்...