×

பாணாவரம் பகுதியில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஆடு, மாடுகள் உயிரிழப்பு: வாழ்வாதாரம் இழந்தோர் வேதனை

பாணாவரம்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் சுற்றுப் பகுதிகளான கூத்தம்பாக்கம், புதூர், மாலையமேடு, மங்களம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.    இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக திடீரென பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், ஆங்காங்கு இருக்கும் ஆடு மாடுகளை குறிவைத்து தாக்கி,  கடித்து குதறி வருகிறது. கூத்தம்பாக்கம் பகுதியில் ஆடு,  மாடுகளை மேய்த்து வரும் முனிசாமி என்ற முதியவரின் மாட்டை நேற்று நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்து போனது.

மேலும் ஆடுகளையும் கடித்து குதறியதால், காயம்பட்ட ஆடுகளை உரிமையாளர்கள், பாணாவரம்  கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். கிராமப்புறங்களில் முக்கிய தொழிலாக ஆடு, மாடு மேய்த்தல் உள்ளது. பல்வேறு குடும்பங்கள் இதையே நம்பி இருப்பதால், அவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கால்நடைகளை கடித்துக் குதறும் தெரு நாய் மற்றும் வெறி நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Panchawaram , Goats and cows killed in street dog bite in Panavaram area: Livelihood loss
× RELATED பாணாவரம் அருகே சிற்றோடை...