×

திருச்செங்கோடு அருகே மேடையில் மண்டியிட்டு மக்களிடம் ஆசி பெற்ற ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன்!!

நாமக்கல் : பட்டியலினத்தவருக்கும் மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஒன்றிய அமைச்சர்களாக பதவி வழங்கப்பட்டு இருப்பது 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத ஒன்று என்று ஒன்றிய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து சேலம் வரை மக்கள் ஆசி யாத்திரை நடத்தி வரும் அவர், 2வது நாளாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வருகை தந்தார். அங்கு அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்து மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 75 ஆண்டுகளாக அருந்ததியர் சமுதாயத்திற்கு இருந்த குறையை பிரதமர் மோடி தீர்த்துவிட்டதாக கூறினார்.மத்திய அமைச்சரவையில் எல் முருகன், வைரமாக இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்து பேசிய எல் முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத தமக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி வழங்கி நாமக்கல் மக்களுக்கு பிரதமர் மோடி அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறினார்.தொடர்ந்து, மேடையில் மண்டியிட்டு வணங்கிய எல். முருகனை பாஜகவினரும் பொதுமக்களும் மலர்தூவி ஆசி வழங்கினர்.இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்தவர்கள் செல்போன் விளக்கு ஒளியை எரியவிட்டு ஆசி வழங்கினர்.

Tags : Union Minister ,El Murugan ,Tiruchenga , எல் முருகன்
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...