×

அமைதி பேச்சுவார்த்தை உல்பா தலைவனுக்கு அசாம் முதல்வர் அழைப்பு

கவுகாத்தி: அசாமில் செயல்பட்டு வரும் உல்பா (1) தீவிரவாத அமைப்பு, பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதத்தில் இருந்து தன்னிச்சையாக சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. வழக்கமாக, சுதந்திர தினம், குடியரசு தின நாட்களில் இந்த அமைப்பு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும். முதல்முறையாக, இந்த சுதந்திர தினத்தன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அது அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், இம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று ஆற்றிய சுதந்திர தின உரையில், ‘‘நமது மாநிலத்தின் இளைஞர்கள் இனிமேலும் கொல்லப்படக் கூடாது. எனவே, அசாம் மக்களின் சார்பாக உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் பரேஷ் பருவாவுக்கு, அரசுடன் அமைதி பேச்சவார்த்தை நடத்த முன் வரும்படி அழைப்பு விடுக்கிறேன்,’’ என்றார்.

Tags : Assam ,Chief Minister ,ULFA , Assam Chief Minister calls on ULFA leader for peace talks
× RELATED அசாமில் மாபியா ஆட்சி நடக்கிறது: பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு