×

மோடி அரசின் சர்வாதிகாரத்தை முறியடிக்க ஜனநாயகசக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு சர்வாதிகாரியாக தமது அதிகார பலத்தை வைத்துக் கொண்டு எதேச்சதிகாரமாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
ஒன்றிய அரசில் அதிகாரக் குவியல் என்பது பிரதமர் அலுவலகத்தில் இருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப் பெரிய சவால் ஆகும்.
 எனவே, கருத்து சுதந்திரம் என்பது அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையாகும்.

அதன் அடிப்படையில் சமூக ஊடகங்களான டிவிட்டர், முகநூலில் பதிவிடுகிற உரிமையை பறிக்கிற மோடி அரசின் சர்வாதிகாரத்தை முறியடிப்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய முயற்சிகளின் மூலமே மோடியின் சர்வாதிகாரத்தை முறியடிக்க முடியும்.

Tags : Democrats ,Modi ,KS Alagiri , The dictatorship of the Modi government, the democratic forces, KS Alagiri
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...