×

தமிழக சிறைகளில் சிறைவாசிகளை 16ஆம் தேதி முதல் உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி: சிறைத்துறை டிஜிபி

சென்னை: தமிழக சிறைகளில் சிறைவாசிகளை 16ஆம் தேதி முதல் உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். e-prisons visitors management system அல்லது சிறைகளின் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வருகை தர வேண்டும். அதிகபட்சமாக 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரு சிறைவாசிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சிறைத்துறை டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

Tags : TN ,DGP , Department of Prisons
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...