கோவை: லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய கேசிபி நிறுவனம் பற்றிய புதிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது. கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் இல்லத்தை சீரமைத்து கொடுத்த கேசிபி நிறுவனம். ஒப்பந்த பணிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளின் குடியிருப்புகளையும் கேசிபி சீரமைத்தது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வீட்டை பல லட்சம் செலவில் சீரமைத்த கேசிபி நிறுவனம். அரசு கட்டிடங்களை வழக்கமாக பொதுப்பணி துறையே சரிசெய்து கொடுக்கும். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்கு சொந்தமான நிறுவனம் கேசிபி. கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 42 இடங்களில் 10ம் தேதி லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.