மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார். சாத்தான்குளம் கொலை வழக்கு இன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.