சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி வெளியிட்டுள்ள அறிக்கை: தொண்டை மண்டலத்தில் அமைய பெற்ற சிவ திருத்தலங்களில் முதன்மையானதும், மூர்த்தி, கீர்த்தி, தீர்த்தம் ஆகிய மூவற்றிலும் புகழ்பெற்ற சிவ திருத்தலங்களில் ஒன்றாகவும், திருஞானசம்பந்தரால் அங்கம்பூம்பாவையை தேவார பதிகம் பாடி உயிர்ப்பித்ததும், பார்வதி தேவியார் மயிலுருவில் சாப விமோச்சனம் பெற்று உமா மகேஸ்வரன் உமா தேவியை திருமணம் செய்து கொண்ட திருத்தலமாகவும் விளங்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீகற்பகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வளையல் சாற்றுதல் நிகழ்ச்சி இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழா நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் http://www.youtube.com/c/MYLAPOREKAPALEES WARARTEMPLE என்ற யூடியூப் சேனல் மூலம், இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நேரலை ஒளிபரப்பில் வழிபாட்டினை கண்டு தரிசித்து கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருவருள் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.