கும்பகோணம்: ரூ.600 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டனர். புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட எம்.ஆர் சாமிநாதன், எம்.ஆர் கணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி தரணிதர் ஆகஸ்ட் 19 வரை நீதிமன்ற காவல் அளித்ததையடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.