சென்னை: அதிமுக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் பல்கலை. ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அருகே கோனம்பேடு கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து தம்பிதுரை பல்கலை கட்டியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.