சென்னை: மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்கவகையில் நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நிதிநிலை அறிக்கை, விவசாயத் துறைக்கான முதல் நிதி நிலை அறிக்கை பற்றி அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி வேளாண் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும் என கூறினார்.