×

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று (31ம் தேதி) மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: வேளச்சேரி - ஆவடி இடையே இன்று காலை 10.15 மணி, ஆவடி - மூர்மார்க்கெட் இடையே காலை 11 மணி, ஆவடி - வேளச்சேரி இடையே பிற்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேப்போல், மூர்மார்க்கெட் - கடம்பத்தூர் இடையே பிற்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட் - ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பிற்பகல் 12.20, 1.15 மணிக்கும், மூர்மார்க்கெட் - திருவள்ளூர் இடையே பிற்பகல் 1 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள், மூர்மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - மூர்மார்க்கெட் இடையே காலை 10.30 மணிக்கு, திருவள்ளூர் - வேளச்சேரி இடையே காலை 11.05 மணிக்கு, திருத்தணி - மூர்மார்க்கெட் இடையே காலை 10.15 மணிக்கு மற்றும் பிற்பகல் 12 மணிக்கு, கடம்பத்தூர் - வேளச்சேரி இடையே பிற்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் பட்டாபிராம், இந்து கல்லூரி, அன்னனூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர், பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

அதேப்போல், அரக்கோணம் - மூர்மார்க்கெட் இடையே காலை 10 மணிக்கு, திருவள்ளூர் - மூர்மார்க்கெட் இடையே காலை 10.50 மணிக்கு, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - மூர்மார்க்கெட் இடையே காலை 11.25 மணிக்கு, திருவள்ளூர் - மூர்மார்க்கெட் இடையே காலை 11.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், மூர்மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Railway Division , Maintenance work, electric train service, Chennai railway section
× RELATED வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும்...