ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் தம்பதிக்கு 14வயது மகள் அருகில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அசாருதீன், கண்ணன் ஆகியோரது அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் இருவரும் மாணவியிடம் ஆபாச படம் எடுத்து அனுப்பும்படி மிரட்டி உள்ளனர். இதனால், பயந்து போன மாணவி, தனது ஆபாச படத்தை எடுத்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனை பார்த்தவுடன் அவர்கள் மீண்டும் அனுப்பி வைக்கும்படி மாணவியிடம் கூறியதாக தெரிகிறது. மாணவி மறுத்ததால் இருவரும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மாணவியின் பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக திருச்சி, மேல சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த கண்ணன் (21) என்ற கம்பெனி ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.