சென்னை: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் வழங்கும் தற்போதைய திட்டத்தால் நகை தொழில் முடங்கும் ஆபத்து என நகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஹால்மார்க் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். ஹால்மார்க் பெறாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.