×

தொடர் மழையால் அமராவதி அணையிலிருந்து திறப்பு கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து கரூருக்கு செல்லும் தண்ணீர்

அரவக்குறிச்சி : நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையை கடந்து கருர் நோக்கிச் செல்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4,047 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவும் உள்ளது.

தற்போது 89 அடி நீர் உயரம் உள்ளது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றது. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம் சின்னதாராபுரம், ராஜபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பல்வேறு பயிர்கள் பயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை பெய்து வரும் காரணத்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து தற்போது 89 அடி நீர் உயரம் உள்ளது. இதனால் அமராவதி அணையிலிருந்து சராசரியாக 2,800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் நேற்று மாலை கரூர் மாவட்ட எல்லையான அரவக்குறிச்சி கொத்தப்பாளயம் தடுப்பணையை கடந்து கருர் நோக்கி செல்கின்றது. இதன் காரணமாக வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Amarawati dam , Aravakurichi: Aravakurichi opened from Amravati Dam due to continuous rains in the catchment area
× RELATED உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில்...