புதுடெல்லி: ஆப்கானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது. அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்கி வருகிறது. இது குறித்து தகவல் சேகரிக்க இந்திய புகைப்படக் கலைஞரான டேனிஷ் சித்திக் ஆப்கானுக்கு சென்றார்.
தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில், காந்தகாரில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக்கும் பலியானார். அவரது உடல் ஏர்இந்தியா விமானம் மூலம் ேநற்று டெல்லி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், அவருடைய உடல் டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழ வளாகத்தில் அடக்கம் செய்ய துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்.