சென்னை: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி பங்கேற்றார். மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர்கள் யாசர், அமீர், சுதீர், மண்டல வர்த்தக இணை தலைவர் ராஜசேகரன், அண்ணாநகர் கிளை தலைவர் சமீர் மற்றும் தி.நகர் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
3 தளங்களில் அதிக இடவசதி, அதிகமான கலெக்சன்கள், அதிகமான டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன. ஏராளமான தங்கம், வைரம், பிளாட்டினம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணி கலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா ’நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக் ’, நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட் ’ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.