×

உங்களது வெற்றிக்காக நாடே காத்திருக்கிறது : ஒலிம்பிக் வீரர்களுக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து!

மதுரை : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகளுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேர் தேர்வாகியுள்ளனர். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை சேர்ந்த 5 பேர் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள் என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களை பஞ்சாபில் நேரடியாக சந்திக்க நிச்சயித்து இருந்தேன். ஆனால் முடியவில்லை. எனவே இன்று இணையவழியில் அவர்களுடன் உரையாடினேன். ஒலிம்பிக் தடகளப் போட்டியில் முதலிடத்தை உறுதியாக்குவீர்கள் என அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை நிலைக்குழு உறுப்பினர் என்கிற முறையில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து விவாதித்து வருகிறேன். கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்ட போதெல்லாம் தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் இருப்பார்கள்? என பலமுறை எண்ணியுள்ளேன். ஆனால் மதுரையில் இருந்தே ஒருவர் செல்வார் என்பதை எதிர்பார்க்கவில்லை. இவர்கள் பதக்கம் வெல்வது நிச்சயம். நாடே உங்களின் வெற்றி செய்தி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினேன். அதற்கு தடகளப் பயிற்சியாளர் மிகச் சிறப்பான பயிற்சியை மேற்கொள்கிறார்கள் நிச்சயம் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Nadeem ,S. Venkatesh , எம்பி சு.வெங்கடேசன்
× RELATED 21 மாநிலங்களை விட அதிக ஜிஎஸ்டி வரி...