ராமநாதபுரம்: ராமநாதபுரம் பரமக்குடி தாலுகா குடியூரில் மணல் குவாரி செயல்பட ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடையை விதித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் குடியூரில் செங்கல் தயாரிக்க மண் எடுப்பதாக கூறி சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.