×

MAY I HELP YOU?: கோவை காவல் நிலையங்களில் பெண் போலீஸ் வரவேற்பாளர்கள்..பொதுமக்கள் நிம்மதி..!!

கோவை: கோவை மாநகர் பகுதியில் உள்ள 20 காவல் நிலையங்களில் புகார்களை பெற்று உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும் வகையில் பெண் போலீஸ் வரவேற்பாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். கோவை மாநகர் பகுதியில் உள்ள 15 சட்ட ஒழுங்கு காவல் நிலையங்கள், 3 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 2 போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்களில் இன்று முதல் சுயற்சி முறையில் பெண் காவல் வரவேற்பாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொண்டு பிரச்சனையை உள்வாங்கி புகார்களை பெறுகின்றனர். இதற்காக 18 லேப்டாப்கள் வழங்கப்பட்டு தினமும் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றனர். வரவேற்பு பணிக்கு நியமிக்கப் பட்டிருக்கும் 40 பெண் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கோவை மாநகர் காவல் ஆணையர் எம்.தாமோரின் உத்தரவின் பேரில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீஸ் வரவேற்பாளர்கள் வழிகாட்டுதல்களால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : Coime Police Stations , Coimbatore Police Station, Female Police, Receptionist
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...