பெங்களூரு: மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகதாது அணைக்கு உடனே அனுமதி தர வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் எடியூரப்பா வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகதாது அணை பற்றி பிரதமரிடம் தமிழக அனைத்துக்கட்சி குழு முறையிட உள்ள நிலையில் முதல்வர் எடியூரப்பா டெல்லி செல்கிறார்.