புதுச்சேரி: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணை கட்ட அனுமதி தரக்கூடாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். மேகதாது அணை கட்டுவதால் காரைக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.