×

செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பாஜ நிர்வாகி கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார்.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகம் கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (60). பைனான்ஸ் தொழில் பார்த்து வரும் இவர், அந்த பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள்  உட்பட 4 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோ படங்களை காண்பித்து அதுபோல் தன்னிடம் பாலியல் சில்மிசம் செய்ய வேண்டும் என்றும், ஆடைகளைக் களைந்து காட்டுவதும்,  தன்னிடம் இதுபோல் நடக்கவில்லை என்றால் பள்ளிக்கு செல்லும்போது கட்டிப்போட்டு ஆடைகளை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்வேன் என்றும் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 இதுதொடர்பாக சிறுமிகளின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து, போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளுக்கு பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பர்வீன் முன் ஆஜர்படுத்தப்பட்ட மகாலிங்கம், மயிலாடுதுறை சிறையில் நேற்றுமுன்தினம் இரவு அடைக்கப்பட்டார். மகாலிங்கம், அமமுகவிலிருந்து கடந்தாண்டு விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது மயிலாடுதுறை  தெற்கு ஒன்றிய பாஜக பொதுச்செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : BJP , Girl, sexual harassment, BJP administrator, arrested
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...