×

விழுப்புரம் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

விழுப்புரம்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது பரோலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளார். சிறுநீரக தொற்று, நரம்பு பிரச்னைகளுக்காக, டாக்டர்கள் அறிவுரைப்படி கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அவ்வப்போது அவர் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று காலை 9.30 மணிக்கு விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போலீஸ் பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பெற்ற அவர் மாலையில் ஜோலார்பேட்டை புறப்பட்டு சென்றார்.

Tags : Villupuram Hospital , Villupuram Hospital Treatment for epilepsy
× RELATED விழுப்புரம் மருத்துவமனையில்...