விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் (29) உயிரிழந்துள்ளார். மும்பையில் இருந்து விழுப்புரம் வந்த இளைஞருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 28 ம் தேதி முதல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.