×

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இணை செயலாளர் நீக்கம்

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை எம்.ஜெகன்மூர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் எஸ்.டார்ஜன் என்பவர் தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு, கட்சியின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதால் இன்று முதல் கட்சி பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Bharata party , Revolutionary Bharat Party, District Joint Secretary, sacked
× RELATED புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம்