×

அம்மன் கோயிலில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் லட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை ஒட்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், இக்கோயிலில் எப்போதும் ஜனநடமாட்டம் இருக்கும். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் லட்சுமியம்மன் கோயிலை திறந்து பூஜை செய்வதற்கு பூசாரி வந்தார். அப்போது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோயில் நிர்வாகிகள் விரைந்து வந்து, சோதனை செய்தனர். அப்போது கோயிலுக்குள் பீரோவில் வைத்திருந்த 2 சவரன் நகை, வெள்ளி கிரீடம், ₹5 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Robbery ,Amman Temple , Amman Temple, robbery
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை