×

பாஜகவால் தான் தோற்றோம்... பாமகவுடன் கூட்டணி வைத்ததால் தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கிடைக்கவில்லை : சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம் : சட்டமன்ற தேர்தலில் பாமகவோடு கூட்டணி வைத்ததால் தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கிடைக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும் ஆடியோ வெளியாகி இருப்பது அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குருவம்மாபேட்டையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாஜக பற்றி சி.வி.சண்முகம் பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் அதே கூட்டத்தில் பாமகவையும் அவர் கடுமையாக விமர்சித்த ஆடியோ வெளியாகி உள்ளது. பாமகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிற்கு தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கிடைக்கவில்லை என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

இதனிடையே விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சிங்குவரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக கூறியது தனது தனிப்பட்ட கருத்து என்றாலும் அதில் மாற்றமில்லை என்றார்.தனது பேச்சிற்கு பாஜக கூறி இருப்பது அவர்களுடைய கருத்து என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கட்சிக்குள் பல கருத்துகளைப் பேசுவோம். கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம் என்றார்.முன்னதாக பாஜகவுடன் கூட்டணி வைத்ததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று சண்முகம் கூறியதற்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து பாஜக - அதிமுக கூட்டணி தொடர்வதாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தனர்.இந்த நிலையில் சண்முகம் தனது கருத்தில் உறுதியுடன் இருப்பதாக கூறியிருப்பது மீண்டும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Baumagawa ,Sunface , சி.வி.சண்முகம்
× RELATED 'ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக...