×

நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 தலைமை பொறியாளர் குமார் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனராகவும், தேசிய நெடுஞ்சாலை அலகு தலைமை பொறியாளர் சந்திரசேகர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளராகவும், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்ட தலைமை பொறியாளர் பாலமுருகன் தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளராகவும், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கீதா நபார்டு மற்றும் கிராம சாலைகள் தலைமை பொறியாளராகவும், சென்னை பெருநகர தலைமை பொறியாளர் சுமதி திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு தலைமை பொறியாளராகவும், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமன் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனராகவும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சாந்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 தலைமை பொறியாளராகவும், நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு தலைமை பொறியாளர் செல்வன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலைகள் தலைமை பொறியாளராகவும், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமன் சென்னை பெருநகர தலைமை பொறியாளராகவும், திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு தலைமை பொறியாளர் விஜயா தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Transfer of 10 Chief Engineers in Highways: Government of Tamil Nadu Order
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...