கொழும்பு: இலங்கை சென்றுள்ள தவான் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தொடக்க வீரர் பிரித்வி ஷா அளித்துள்ள பேட்டி: டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாடுவது ஒருவகையான மகிழ்ச்சி. அவர் பேசும் விதம், தனது பயிற்சி அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது. கிரிக்கெட்டை பற்றி அவருக்கு எல்லாம் தெரியும். அவருடன் மணிக்கணக்கில் பேச விரும்புகிறேன். இந்த சுற்றுப்பயணத்தில் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்த வேண்டும்.
நான் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற ஆசைப்பட்டேன். எனது சிறந்ததை நான் கொடுக்க விரும்புகிறேன். எனது பேட்டிங்கில் நான் கடுமையாக உழைத்தேன் என்பது அனைவருக்கும் தெரியும், எனது நுட்பத்திலும் சில மாற்றங்கள் உள்ளன. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, எனது நுட்பத்தைப் பற்றி நிறைய பேசப்பட்டது. எனது உடற்தகுதி குறித்து பேச்சு வந்தது. அந்த நேரத்தில், நான் கடினமாக உழைத்தேன் என்று எல்லோரும் உணர்ந்தார்கள், பார்த்தார்கள்.
நான் மீண்டும் வருவதற்கு ஆர்வமாக இருந்தேன். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நான் கவலைப்படுவதில்லை, ஆனால் தினசரி அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என்று உணர்ந்தேன், என்றார்.