×

இதுவரை இல்லாத வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இம்முறை 254 பெண்கள் பங்கேற்கின்றனர் : ஆஸ்திரேலியா ஒலிம்பிக் சம்மளேனம்

டோக்கியோ : இதற்கு முன் இல்லாத வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இம்முறை 254 பெண்கள் பங்கேற்க உள்ளதாக ஆஸ்திரேலியா ஒலிம்பிக் சம்மளேனம் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி டோக்கியோவில் தொடங்க உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே அங்கு செல்ல தொடங்கிவிட்டனர்.இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இம்முறை 254 பெண்கள் உட்பட 472 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக அந்நாட்டு ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்த அந்நாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமை அதிகாரி ஈயான் செஸ்டர்மேன், கோவிட் பிரச்சனைகளால் மேலும் பலர் ஒலிம்பிக் தகுதி எட்டமுடியாமல் போனதாக தெரிவித்தார். இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கையிலான பெண்கள் எந்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Tokyo Olympics ,Australian Olympic Association , ஒலிம்பிக்
× RELATED டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி...