×

தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்: அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதலுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதும்,  வலைகளை அறுத்து சேதப்படுத்தி விரட்டியடித்திருப்பதும் கண்டிக்கத்தக்கவை.  தாக்குதலால் மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையிலான சிங்கள அரசின் இத்தகைய அத்துமீ்றலை இந்தியா இனியும் அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்; இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

Tags : Tamil Nadu ,Anbumani , Sri Lankan attack on Tamil Nadu fishermen: Anbumani condemned
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...