சென்னை: நீட் பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆய்வு செய்யவே நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.