சென்னை: பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். சிறையில் நிகழ்ந்த மோதல் தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறை பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.