×

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் என் உறுதி: மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்

டெல்லி: மின் வழங்கல் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.03 லட்சம் கோடியிலான புதிய திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் மின் தட்டுப்பாடு நீங்கி தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் கையிருப்பில் இருப்பதாக கூறினார்.

மின் வளங்களுக்காக 3.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டம் பற்றி விளக்கிய அவர் புதிய மின்பாதை உருவாக்கம், துணைமின் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். சௌபாக்கியா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். சூரிய மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்சாரம் வழங்கப்படுவதற்கான திட்டங்களும் விரிவாக்கப்படும் என்றும் இதற்கான கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.



Tags : Federal Minister ,R. Q. Singh , Electricity
× RELATED குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு...