டெல்லி: மதுரை எய்ம்ஸ்-க்காக சரியான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்கினால் உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு தயார் என தெரிவித்துள்ளது.