×

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சித்தூர் : காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

மேலும், விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இவர்கள் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலில் சங்கடஹர சதுர்த்தசி பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.


Tags : Varasiti Ganesha Temple , Chittoor: Devotees waited for 2 hours at the Varasiti Ganesha Temple to see Swami. Andhra Pradesh, Chittoor District
× RELATED காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்...