சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த ஆட்சியில் ஊடகங்கள் மெது தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்ததற்கு ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி அமைப்பின் தலைவர் என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான்சிங், நக்கீரன்கோபால் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.