×

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம்

திருச்சி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னதாக உள்ள பிரதான சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

200 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு செவி சாய்க்காத மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது. சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது விவசாயி தண்டபாணி என்பவர் மயக்கம் அடைந்தார். தற்போது அவர் சாலையின் ஓரமாக படுக்க வைக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் தங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே விடவில்லை என மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் தொடர்கிறது.

மாவட்ட ஆட்சி தலைவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : Trichi ,Tanjai , farmers, protest
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...