×

ஒரு சிலரின் சுயநலத்தினால் தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வி!: சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகியுடன் பேசிய சசிகலா குமுறல்..!!

சென்னை: ஒரு சிலரின் சுயநலத்தினால் தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைய நேரிட்டதாக சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகியுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிமுக நிர்வாகிகள் பலருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடும் ஒலிப்பதிவு வெளியாகி வருகிறது. 


இந்த நிலையில் இன்று ஒரேநாளில் அதிமுக நிர்வாகிகள் 3 பேருடன் பேசிய உரையாடல் வெளியாகியிருக்கிறது. சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகி பூசுத்துரை என்பவருடன் பேசிய சசிகலா, அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.கந்தசாமி உள்ளிட்ட 5 பேர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  சிந்து ரவிசந்திரன், கே.ஆர்.கந்தசாமி, எஸ்.பி. ரமேஷ், வி.சி. வரதராஜ், பி.கே.காளியப்பன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : AIADMK ,Sasikala Kumural ,Sankarankoil , Selfishness, election, AIADMK defeat, Sasikala
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...