×

மொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 12.94% ஆக உயர்வு : அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் ஆபத்து!!

டெல்லி : இந்தியாவில் மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நாட்டின் பணவீக்க அளவீடு மே மாதத்தில் 12.94% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பணவீக்க அளவீடு 10.5% ஆக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கமும் 37.6% ஆக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் எரிபொருள் பணவீக்கம் 9.75% உயர்ந்தது. ஆனால் மே மாதத்தில் இது 4 மடங்கு உயர்ந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்து நம்பி இருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.மொத்த சந்தை உணவுப் பொருட்களின் பணவீக்கம் 8.11% உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் அல்லாதவைகளின் பணவீக்கம் உயர்ந்து காணப்படுவது மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையேற்றம் ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் உள்நாட்டு எரிபொருள்கள் விலை உயர்வு போன்றவை இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட காரணமாக அமையும்.


Tags : மத்திய வர்த்தகம்
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...