அறந்தாங்கி : அறந்தாங்கியில் நேற்று இடி மின்னலுடன் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.அறந்தாங்கியில் நேற்று மாலை திடீரென சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. நேற்று பெய்த மழையின் காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று காலை முதலே வெய்யில் அதிகமாக இருந்தது. மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், வெப்ப காற்றும் வீசியது. இந்நிலையில் மாலையில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. லேசாக தொடங்கிய மழை படிபடியாக அதிகரித்து இடி மின்னலுடன் மழை பெய்தது.சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்பட்டது. நேற்றுமுன்தினமும் இரவு மழை பெய்தது.நேற்று காலை வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): புதுக்கோட்டை 13, மீமிசல் 4.2, ஆவுடையார்கோவில் 3, விராலிமலை 15.2மிமீ மழை பெய்துள்ளது….
The post புதுகை மாவட்டத்தில் 1 மணிநேரம் கோடை மழை appeared first on Dinakaran.